Wednesday 30 September 2015

பொலிவிந்து வரும் நீலப்பந்து

பால்வெளியிலே ஒரு நீலப்பந்து
கண்கொள்ளா கவின் கொஞ்சும்
உயிர் கோளம் நம் பூமிப்பந்து

பல காந்த துகள் ஒன்றோடு ஓன்று சேர்ந்து பின்னர் மிகப்பெரிய அளவில் உண்டான பெரிய துகள் மற்றொன்று துகளில்  மோதி நெருப்பு கோளத்திலிருந்து ஒரு சிறிய துகள் சிதறி வந்த ஒரு பகுதி உருண்டை வடிவம் பெற்று தானும் சுழன்றது .நெருப்பு கோளமாக இருந்த அது காலபோக்கில் குளிர்ந்து நீரும் நிலமும் தோன்றின.உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற உயிர்க்கோளமாக உருவெடுக்க சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலானது.
 நமது பூமியானது அதன் வடிவமைப்பு மற்றும் வாழ்வமைப்புகளில் மற்ற கோள்களை விட தனித்துவம் வாய்ந்த தன்மை பெற்றுள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இல்லாமலும், மிக தொலைவில் இல்லாமலும் நடுவில் அமைந்து உயிரின்ஙகள் வாழ ஏற்ற துவாக உள்ள ஒரு வட்டப்பந்து தான் நமது பூமி
     மனிதன், பூமித்தாய் பல மில்லியன் ஆண்டு தவமிருந்து பெற்றெடுத்த பொக்கிஷம் ஆனால் அந்த தவ புதல்வர்களே அந்த தாய்க்கு எதிராக அவளை கொலை செய்ய துணிந்த்துதான் அவளுடைய துர்பாக்கியம். எனினும் அவள் பொறுமையாய் அனைத்தயும் தாங்கி கொண்டாள். ஆனால் அவளுடைய மற்ற குழநதைகளுக்கும் மனிதன் அழிவை ஏற்படுத்தியது அவளை சிறு முகச்சுழிப்பிற்கு ஆளாக்கியது. அவளுடைய சிறு முகச்சுழிப்பு இந்தியாவில் சுனாமியாய் அமெரிக்காவில் சூறாவளியாய் சீனாவில் பூகம்பமாய் வெளிப்பட்டது.
     உலகம் தோன்றியதை 24 மணி நேர கடிகாரத்தின் மூலம் வெளிப்படுத்தினால் அது பின்வருமாறு அமையும். அதில் முதலில் 4 வது மணி நேரத்தில்  தான் உயிரினமே தோன்றியது. மனிதனோ 23 வது மணி நேரம் 58 வது நிமிடம் 43 வது மணித்துளியில்தான் தோன்றினான். கடைக்குட்டியாய் பெற்ற மணிச்செல்வம் தனக்கு முன் பிறந்த தன் சகோதர உயிரின்ங்களையும் தான் பெற்ற தாயையும் அழிக்க முயற்சிப்பது என்ன ஒரு கொடுமை.

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்பான்   
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் 

என்றார் பாரதிதாசன். ஆனால் இன்று மனிதனோ உள்ளமே இல்லாமல் தன் நலத்தை மட்டுமெ எண்ணி வாழ்ந்துவருகிறான்..

      முதன் முதலில் நீரில் நிற்பன ,ஊர்வன ,பறப்பன   ,நடப்பன மனிதன் என பலவளர்ச்சி நிலைகளை பெற்று உயிர்க்கோளமாக பெயர் பெற்றது .உயிர்க்கோளதின் உயிர் நாடியாக வீட்டிறிருப்பது மனிதன் தான் மனிதனே உயிர்க்கோளதின் மையம் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றன அத்தகைய அளவற்ற சுற்றுச் சூழலைப்பற்றி பார்போம். 

சுற்றுசூழல்
     நம்மை சுற்றி இயற்கையால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் வாழக்குடிய ஒரு நிலையே சுற்றுசூழல் எனப்படும். ஒவ்வொரு உயிரினமும் சுற்று சுழலை பாதிக்காத வண்ணம் தன்னை மேம்படுத்தி கொள்கிறது. எடுத்துக்காட்டாக மண்புழு தன்னால் இயன்ற அளவு உணவை இந்த சுற்று சூழலில் இருந்து எடுத்துகொண்டு பின் தன் எச்சத்தை மண்ணுக்கு உரமாக்குகின்றது. மனிதனை தவிர அனைத்து உயிரினமும் எதை இந்த பூமியிலிந்து எடுத்து கொண்டதோ அதை மீண்டும் இந்த பூமிக்கு அளித்து சுற்று சூழல் சமநிலையை  உண்டாக்குகிறது.
ஆனால் நாம் சுற்று சுழலில் இருந்து எடுத்துகொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஈன்ற பூமியை பாழ்படுத்துகின்றோம். மேலும் நாம் எவ்வாறெல்லாம் இந்த பூமியை எவ்வாறு பாழ்படுத்துகின்றோம் என்று வகைப்படுத்தியுள்ளோமே தவிர  அதனை சரி செய்ய முயலாமல் மேலும் மேலும் அந்த வகைப்பாடை மட்டுமே அதிகரித்து வருகின்றோம்..

பூமியை பாழ்படுத்தும் வகைகள்:
1.நீர் மாசுபாடு
2.நில மாசுபாடு
3.காற்று மாசுபாடு
4.ஒலி மாசுபாடு
5.உணவு மாசுபாடு
மேற்கணட மாசுபாடுகளை பற்றி நீங்கள் நன்றாகவே     அறிவீர்கள். நான் அதனை விளக்கப்போவதில்லை. நாம் மாசுபாடுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அதனை சரிசெய்ய முயலிவில்லை. ஆனால் நமக்கு அதனை சரிசெய்ய போதிய அனுபவமும் அறிவும் உள்ளது.

     நாம் நம்மை அறியாமலே இப்பூவுலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றோம். இதற்கு நம் அறியாமையே காரணம் இதற்கு ஒரே தீர்வு நாம் எவ்வாறு இந்த பூமியை அழிக்கின்றோம் என்று பட்டி தொட்டி அனைத்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதும், மேலும் ஒளிப்படங்களாக எடுத்து அனைத்து மக்களுக்கும் சென்றடையுமாறு செய்யவேண்டும்.இதற்கு ஊடகங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம். வளர்ச்சி என்பது தானும் வளர்வது தன்னை சுற்றி இருப்பதும் வளர்வது. ஆனால் இன்றோ தன்னை சுற்றி அழித்து தான் மட்டும் வளர்ந்து வருகின்றான். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோளை அனுப்புவது பற்றியும் அதில் தண்ணீர் இருபதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதை பெருமையாக கருதுக்கின்றோம். ஆனால் இருப்பதை அழித்துவிட்டு புதிதாய் ஒன்றை தேடுவது ஏன்?

பசும்புற்களால் தொட்டில் அமைத்து
வெண்பூக்களால் மெத்தை செய்து
சில் வண்டுகள் தாலாட்ட பாட
போற்றி வளர்த்தால் பூமித்தாய்
இவன் தான் தன் தவப்புதல்வன் என்று
தகுந்தன தப்பிழைக்கும் என்ற விதி மாற்றி
தான் மட்டுமே பிழைக்க நினைத்தது ஏனோ?
சிந்திப்பாய் மானிடா…………………….

      சூழ்நிலைக்கும் நமது சூழலுக்கும் இடையில் காணப்படுவது சுற்றுச்சூழல் நாம் சீரோடு வாழ்ந்து வருவதை சீரழிவுக்கு காரணம் நெகிழி அரக்கன்  தான் மகிழ்ச்சியோடு வாழ்ந்த இந்த பூமியில் மாசு வந்து அடைந்தது நமது அறியாமையே.மாசு இல்லாமல் மருசுழற்சியோடு வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்க்கை

காங்கோ நாட்டு கிராமம் :



             இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்காவில் காங்கோ நாட்டு கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி. இந்த ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் 75% காடுகள் மீதம் 25% மக்கள் வசிக்கும் நிலப்பரப்பு இந்த குளுர்ச்சியான பகுதியில் வீட்டுக்கு ஒருமரம் வளர்பது அந்த நாட்டின் உறுதிமொழி ஆனால் அங்கு மரங்களை சுற்றி  மிக எளிமையாக வீடுகள் இருந்தாலும் அவர்கள் இயற்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். அனைத்து வீடுகளுக்கு முன்பும் நிழல் தரும் மரம். மரத்தடியில் இளைப்பாரும் குடும்பம். மாதம் மும்மாரி பெய்யாமல் விடுமா? என்ன? கண்ணிற்கெட்டிய தூரம் பசுமை.ஆப்ரிக்காவின் டாக்டர். வாங்கரி மாத்தாய் நோபல் பரிசு வாங்குவதற்கு மரமும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஆனால் அதே ஆப்ரிக்காவில் சோமாலியா#, எத்தியோப்பியா* போன்ற நாடுகளில் மரத்தை அதிகம் வெட்டியதின் காரணமாக பஞ்சமும் பட்டினிச் சாவும் நடைபெறுவதும் அங்குதான்.
கேரளா சென்றுவிட்டு வந்தால் எவ்வளவு பசுமையாக உள்ளது அந்த ஊர்கள்என அங்கலாய்க்கும் உதட்டளவு மனிதர்கள் வந்த ஒரு வாரத்தில் குப்பை விழுகிறது, ,வேர் வீட்டிற்குள் வந்துவிடும், வீட்டின் அழகு மறைக்கப் படுகிறது, வாங்கிய புது கார் வீட்டிற்குள் வர தடையாக உள்ளது, வீட்டிற்கு நிழல் அடித்துவிடுகிறது என ஏதேனும் ஒரு காரணம் கூறி நன்கு வளர்ந்த மரத்தை வெட்டத் துடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சி போய்விடுகிறது. என்று மரத்தின் பயனை புரிந்து கொள்வார்களோ? தெரியவில்லை. தென்மேற்கு பருவ மழை துவங்கி 30 நாட்கள் முடிந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய அளவு மழை கிடைக்கவில்லை. வருடம் மும்மாரி பெய்தாலே அதிகம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தமிழகத்தின் வனப்பரப்பு 17.5% இருக்க வேண்டிய அளவு 33%. சிந்திப்போம், செயல்படுவோம், மழை பெறுவோம் .


வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும்மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015க்காகவே எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே.  ஐந்து வகையான போட்டிகளில் வகை-(2) சுற்றுச்சூழல் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இதற்கு முன் இப்படைப்பு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டியின் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதியளிக்கிறேன்

இணைப்பு




3 comments:

  1. வணக்கம் நண்பரே! அருமையான தகவல்கள்! ஒவ்வொரும் உணரவேண்டிய தகவல்கள்! .நன்றி
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete