Tuesday 1 December 2015

TNPSC GROUP-II (மாதிரி வினா விடைகள் -தமிழ் இலக்கிய வரலாறு -1.12.2015)


பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா
  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
"நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
"பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
"சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
கருடாம்சம்    - பெரியாழ்வார்
சுதர்சனம் - திருமழிசை
களங்கம் -  திருமங்கையாழ்வார்
அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்
அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
  நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
  





குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
கந்தர் கலிவெண்பா

குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்
குட்டித் திருவாசகம் எனப்படுவது?
திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 96
   ஓரடியில் நீதியை உரைக்கும் நூல்கள் எவை?
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, முதுமொழிக்காஞ்சி
உலகநீதியின் ஆசிரியர் யார்?
உலகநாதர்
நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
    குமரகுருபரர்
சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?
    குமரகுருபரர்
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான தமிழ்ப்பாட்டு எது?
    நீதி நெறிவிளக்கத்தில் இடம் பெறும் நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்.....எனத்தொடங்கும்  பாடல். தமிழகம் வந்த போது காந்தியடிகள் இப்பாடலில் இடம் பெறும்    “நீரில் எழுத்தாகும் யாக்கைவரியை தன் கைப்பட எழுதி மோ.க.காந்தி என தமிழில் தன் கையொப்பம் இட்டு கொடுத்துள்ளார்.
கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
    சிவப்பிரகாசர்
  நன்னெறியின் ஆசிரியர் யார்?
    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர்

அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
    முனைப்பாடியார் (சமணர்)

அருட்கலச்செப்பு எனும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் எது?
    அறநெறிச்சாரம்

 “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்

நட்டான் என்பதன் பொருள் என்ன?
    நண்பன்
  
ஒளவையார் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எவை?
    நீதிநூல்கள்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்) நல்வழி, கல்வியொழுக்கம்
    பக்தி  நூல் : விநாயகர் அகவல் 
    தத்துவ நூல் : ஒளவைக்குறள்

ஆத்திசூடி என்பதன் பொருள் என்ன?
    ஆத்திப்பூமாலையை சூடிய சிவபெருமான்
 வாக்குண்டாம் என அழைக்கப்படுவது?
    மூதுரை
 நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
    மூதுரை
  “பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
    “சங்கத் தமிழ் மூன்றும்தாஎனக் கூறியவர்?
    ஒளவையார் (நல்வழி)
  “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்.

கல்வியொழுக்கத்தின் ஆசிரியர் யார்?
    ஒளவையார்
 அஞ்சு வயதில் ஆதியை ஓது
    ஊமை என்பவர் ஓதாதவரே
    ஏழை யென்பவர் எழுத்தறியாவர்
    கண்ணில்லாதவன் கல்லாதவனே
    தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்

கடல்கோளும் கரையானும் அழித்தது போக எஞ்சிய தமிழ்நூல்கள் எவை?

    சங்க நூல்கள்