Tuesday 1 December 2015






குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
கந்தர் கலிவெண்பா

குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்
குட்டித் திருவாசகம் எனப்படுவது?
திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 96
   ஓரடியில் நீதியை உரைக்கும் நூல்கள் எவை?
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, முதுமொழிக்காஞ்சி
உலகநீதியின் ஆசிரியர் யார்?
உலகநாதர்
நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
    குமரகுருபரர்
சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?
    குமரகுருபரர்
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான தமிழ்ப்பாட்டு எது?
    நீதி நெறிவிளக்கத்தில் இடம் பெறும் நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்.....எனத்தொடங்கும்  பாடல். தமிழகம் வந்த போது காந்தியடிகள் இப்பாடலில் இடம் பெறும்    “நீரில் எழுத்தாகும் யாக்கைவரியை தன் கைப்பட எழுதி மோ.க.காந்தி என தமிழில் தன் கையொப்பம் இட்டு கொடுத்துள்ளார்.
கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
    சிவப்பிரகாசர்
  நன்னெறியின் ஆசிரியர் யார்?
    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர்

அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
    முனைப்பாடியார் (சமணர்)

அருட்கலச்செப்பு எனும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் எது?
    அறநெறிச்சாரம்

 “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்

நட்டான் என்பதன் பொருள் என்ன?
    நண்பன்
  
ஒளவையார் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எவை?
    நீதிநூல்கள்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்) நல்வழி, கல்வியொழுக்கம்
    பக்தி  நூல் : விநாயகர் அகவல் 
    தத்துவ நூல் : ஒளவைக்குறள்

ஆத்திசூடி என்பதன் பொருள் என்ன?
    ஆத்திப்பூமாலையை சூடிய சிவபெருமான்
 வாக்குண்டாம் என அழைக்கப்படுவது?
    மூதுரை
 நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
    மூதுரை
  “பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
    “சங்கத் தமிழ் மூன்றும்தாஎனக் கூறியவர்?
    ஒளவையார் (நல்வழி)
  “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்.

கல்வியொழுக்கத்தின் ஆசிரியர் யார்?
    ஒளவையார்
 அஞ்சு வயதில் ஆதியை ஓது
    ஊமை என்பவர் ஓதாதவரே
    ஏழை யென்பவர் எழுத்தறியாவர்
    கண்ணில்லாதவன் கல்லாதவனே
    தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்

கடல்கோளும் கரையானும் அழித்தது போக எஞ்சிய தமிழ்நூல்கள் எவை?

    சங்க நூல்கள்

0 comments:

Post a Comment